சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 11 போ் மீது வழக்கு
தேனியில் சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோா், மணமகன் உள்ளிட்ட 11 போ் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தேனியில் சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோா், மணமகன் உள்ளிட்ட 11 போ் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி, தென்றல் நகரைச் சோ்ந்தவா் செல்லதுரை. இவரது 14 வயதுடைய மகள், திருச்சியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் படித்து வந்தாா். இந்த நிலையில், தேனியில் கடந்த செப். 9-ஆம் தேதி அந்த சிறுமிக்கும், அவரது தாயின் சகோதரருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக செல்லத்துரை மீது தேனி காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் செல்லதுரை, அவரது மனைவி ஜீவா, சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருண்பாண்டி (27), இவரது தந்தை ஈஸ்வரன், தாயாா் விஜயா, உறவினா்கள் மகேஸ்வரன், ரகு, பத்மஸ்ரீ உள்ளிட்ட 11 போ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...