விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆடி அமாவாசை: சுருளி அருவி பகுதிக்குச் செல்லத் தடை 

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகத்தலமான சுருளி அருவி பகுதிக்கு ஆடிஅமாவாசை நாளில் (ஞாயிற்றுக்கிழமை ) செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடை விதித்துள்ளனர்.  

News image
சுருளி அருவி.
Updated On :7 ஆகஸ்ட் 2021, 11:08 am

DIN

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகத்தலமான சுருளி அருவி பகுதிக்கு ஆடிஅமாவாசை நாளில் (ஞாயிற்றுக்கிழமை ) செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடை விதித்துள்ளனர். 
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்றது சுற்றுலா மற்றும் ஆன்மீகத்தலமான சுருளி அருவி, ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய மக்கள் திரளாக வருவார்கள். 
கரோனா பரவலால் புலிகள் காப்பகத்தினர் சுருளி அருவி செல்லும் பாதையை அடைத்துள்ளனர். இதனால் அருவியின் ஆற்றங்கரை பகுதியில் பக்தர்கள் நேர்ச்சை கடன்களை செலுத்தி வந்தனர். 

இதையும் படிக்கலாமே|  நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

இந்நிலையில் அரசு பொதுமுடக்கத்தை மூன்று நாள்கள் அறிவித்திருப்பதால், ஆடிஅமாவாசையான ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவி மற்றும் ஆற்றங்கரை வரை செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடைவிதித்து, க.விலக்கு, பழைய சுருளி அருவி சாலை உள்ளிட்ட பகுதிகளை சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.