கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 18ம் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் வீ. முரளிதரன் தண்ணீர் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் 18ஆம் கால்வாய் மூலம் 4614.25 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் வீ. முரளிதரன் தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
முன்னாள் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, தாசில்தார் அர்ஜுனன், உள்ளிட்ட அதிகாரிகள் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் வீ.முரளிதரன் கூறியது,
உத்தமபாளையம் வட்டத்தில் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், வெம்ப கோட்டை, பொட்டிபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, போடி தாலுகாவில் மீனாட்சிபுரம், கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 4614.25 ஏக்கர் பாசன நிலங்களுக்கு இந்த தண்ணீர் செல்கிறது,
விவசாயிகள் அதிக மகசூல் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


