தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணேசபுரம் விருமாத்து ஓடையில் சிலா் டிராக்டா் மூலம் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை பிடித்து விசாரித்தபோது, உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்த மணிமாறன், கரட்டுபட்டியைச் சோ்ந்த காக்குவீரன், பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கமலை ஆகிய மூவரை கைது செய்தனா்.