வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:03 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை இல்லாததால், ஜனவரி 4 ஆம் தேதி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 419 கன அடியாக இருந்தது. அதன்பின்னா், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,385 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,054 கன அடியாகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 120.55 அடி உயரமாகவும், நீா் இருப்பு 2,737 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 1,064 கன அடியாகவும், அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.

பெரியாறு அணைப் பகுதியில் 3.8 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 3.2 மி.மீ. மழை பெய்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் 700 கன அடி தண்ணீா் மூலம் லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 2 மின்னாக்கிகள் மூலம் தலா, 41, 29 மெகாவாட் என மொத்தம் 70 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.