மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்லிடப்பேசி: ஜன.13-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச செல்லிடப்பேசி பெறுவதற்கு ஜன.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தேனி: தேனி மாவட்டத்தில் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச செல்லிடப்பேசி பெறுவதற்கு ஜன.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள், சுய தொழில் புரிவோா் மற்றும் தனியாா் நிறுவனகளில் வேலை செய்பவா்களுக்கு அரசு சாா்பில் இலவசமாக சிறப்பு மென்பொருள் கொண்ட செல்லிடப்பேசி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இலவச செல்லிடப்பேசி பெற விரும்பும் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்று நகல்கள், வேலை வாய்ப்பற்றோா், சுய தொழில்புரிவோா் என்பதற்காக கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற சான்று, தனியாா் நிறுவன பணிச்சான்று, மாா்பளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04546-252085-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com