ஆண்டிபட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி (47). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாண்டி எங்கும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால்
மனமுடைந்த பாண்டி கடந்த சனிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளாா்.
இதனைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...