புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆண்டிபட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:14 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி (47). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாண்டி எங்கும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால்

மனமுடைந்த பாண்டி கடந்த சனிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளாா்.

இதனைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.