தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம்: பணியை விரைவாக்க கோரிக்கை

தேனி மாவட்டம் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளதால் விரைந்து வேலைகளை முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image

குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம்

Updated On :23 நவம்பர் 2021, 2:31 pm IST


கம்பம்: தேனி மாவட்டம் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளதால் விரைந்து வேலைகளை முடிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் அருகே கோசேந்திர ஓடை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக அமைந்துள்ள இந்த ஓடைக்கு நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து வரும்.

கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் ஓடையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் ஏற்பட்டதால், வரத்து ஓடையில் நீர் அதிகரித்து பாலத்தின் இருபுறமும் உள்ள கரைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்திலும் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பல நாட்கள் ஆகியும் இன்னும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.

தமிழக கேரள மாநிலங்களை இணைக்கும் பாலமாக இது உள்ளதால், நாள்தோறும் அதிகமான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து வருவதாலும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆபத்து ஏற்படும் முன். விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.