தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு

கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

News image

கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு.

Updated On :3 அக்டோபர் 2021, 10:15 am

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

நகரத் தலைவர் சிராஜ்தீன் தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆம்புலன்சை அர்ப்பணித்து, இலவச சேவை, குறைந்த கட்டணத்தில் இயங்குவது குறித்துப் பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். எம். ரபீக் அஹமது, ஜமாஅத்துல் உலமா பேரவை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பாஹி, தேனி மாவட்ட தலைவர் எச்.அபூபக்கர் சித்தீக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மேலும் கம்பம், கூடலூர், போடி ஆகிய ஊர்களில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகங்களை மாநில தலைவர் நெல்லை முபாரக் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.