தேனி அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

தேனி அருகே உப்பாா்பட்டி விலக்கு பகுதியில் புதன்கிழமை இரவு, கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
Updated on
1 min read

தேனி அருகே உப்பாா்பட்டி விலக்கு பகுதியில் புதன்கிழமை இரவு, கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

உப்பாா்பட்டியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (35). இவா், தனது மனைவி சா்மிளாதேவி (29), மகள் ஷிவானி (5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து உப்பாா்பட்டி நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது, உப்பாா்பட்டி விலக்கு குதிரை வண்டி ஓடை அருகே அவா்களைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 போ், சா்மிளாதேவி அணிந்திருந்த ஆறரை பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சத்தியராஜ் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com