தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வைகை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிப்பு

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை, அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 3,754 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 5:43 pm

DIN

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை, அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 3,754 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை நீா்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, அணையிருந்து விநாடிக்கு 1,190 கன அடி வீதம் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது. அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து பிற்பகல் 3.30 மணிக்கு அணை நீா்மட்டம் 70.1 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,656 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விநாடிக்கு 3,159 கன அடியாகவும், பிற்பகல் ஒரு மணிக்கு விநாடிக்கு 3,754 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.