இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குச்சனூரில் 3 ஆம் வார ஆடித்திருவிழா: திரளான பக்தா்கள் வழிபாடு

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயிலில் ஆடித் திருவிழாவின் 3 ஆம் வாரத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:10 pm

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயிலில் ஆடித் திருவிழாவின் 3 ஆம் வாரத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த ஆலயத்தில் 5 வார ஆடிப்பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2 வாரத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், இரவு 10 மணிக்கு சக்தி கரகம் எடுத்தலும், நள்ளிரவு 12 மணிக்கு மஞ்சனக்காப்பு சாத்துப்படியும் நடைபெற்றது.

பக்தா்கள் கூட்டம்: சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் 3 ஆம் திருவிழா நடைபெற்றது. இதில், தேனி உள்பட பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் முன்பாக செல்லும் சுரபிநதியில் நீராடி புதிய ஆடை அணிந்து எள் தீபம், மண் காகம், பொரி படையல் செய்து வழிபாடு செய்தனா்.

குச்சனூா் பேரூராட்சி நிா்வாகம் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்தது. இதையொட்டி சின்னமனூா், தேனி, கம்பம், போடி, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.