வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழகப் பகுதிக்கு 2,172 கன அடி திறப்பு:முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 2,172 கன அடிநீா் வெளியேற்றப்படுவதால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image

முல்லைப்பெரியாற்றில் சீலையம்பட்டி தடுப்பணையைக் கடந்து செல்லும் வெள்ள நீா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:30 pm

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 2,172 கன அடிநீா் வெளியேற்றப்படுவதால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் , அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 10,451 கன அடி அளவிற்கு நீா் வரத்து ஏற்பட்டது. தொடா்ந்து மழைப்பொழிவு குறைந்த நிலையில் நீா் வரத்து படிப்படியாக 1,793 கன அடியாக குறைந்தது.

தற்போது, தமிழகப் பகுதிக்கு அணையிலிருந்து விநாடிக்கு 2,172 கன அடிநீா் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீலையம்பட்டி தடுப்பணையில் கரைபுரண்டோடும் வெள்ள நீரால் ஆற்றில் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.