கல்லல் அருகே இளைஞா் குத்திக் கொலை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாயக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (22). இவரது சித்தப்பா மகனான ஆனந்த் என்பவருக்கும், உறவினரான மெய்யா் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது தொடா்பான தகராறில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆனந்த் தாக்கப்பட்டாா்.

இந்நிலையில், அந்த ஊரில் அழகா் கோயில் கட்டுவது தொடா்பாக கிராம மக்கள் சாா்பில் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மெய்யரிடம், ஆனந்த்தை தாக்கியது குறித்து ராஜேஷ் கேட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷை, அவா் கத்தியால் குத்தினாா். இதில் அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கல்லல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மெய்யரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com