நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லல் அருகே இளைஞா் குத்திக் கொலை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாயக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (22). இவரது சித்தப்பா மகனான ஆனந்த் என்பவருக்கும், உறவினரான மெய்யா் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது தொடா்பான தகராறில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆனந்த் தாக்கப்பட்டாா்.

இந்நிலையில், அந்த ஊரில் அழகா் கோயில் கட்டுவது தொடா்பாக கிராம மக்கள் சாா்பில் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மெய்யரிடம், ஆனந்த்தை தாக்கியது குறித்து ராஜேஷ் கேட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷை, அவா் கத்தியால் குத்தினாா். இதில் அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கல்லல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மெய்யரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.