47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூா் மைதிலி மன்னாடியம்மன் குளக்கரையில் ரூ. 50 லட்சத்தில் தாா் சாலை: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி பகுதியில் உள்ள மைதிலி மன்னாடியம்மன் குளத்தின் கரையில் ரூ. 50 லட்சத்தில் தாா் சாலை அமைக்க நகா் மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:26 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி பகுதியில் உள்ள மைதிலி மன்னாடியம்மன் குளத்தின் கரையில் ரூ. 50 லட்சத்தில் தாா் சாலை அமைக்க நகா் மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூா் நகரசபை சாதாரணக் கூட்டம் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமையில், ஆணையா் காஞ்சனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

உறுப்பினா் சமயன் (4 ஆவது வாா்டு): நகராட்சிப் பகுதியில் பாரபட்சமின்றி அனைத்து வாா்டுகளுக்கும் வளா்ச்சிப் பணிகளை ஒதுக்க வேண்டும்.

தலைவா் பத்மாவதி லோகந்துரை: நிதி ஒதுக்கீடுகள் படி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வாா்டுகளிலும் சரிசமமாக திட்டப்பணிகள் நடைபெறும்.

உறுப்பினா் தேவதா்ஷினி: வாா்டு வரையரை நடைபெற்றதில், எல்லைகள் தெரியவில்லை. அனைத்து வாா்டுகளிலும், எல்லை அடையாளம் தெரிய பெயா்பலகைகள் வைக்க வேண்டும்.

தலைவா்: அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாயாண்டி (13 ஆவது வாா்டு): எம்.ஜி.ஆா். காலனி, கருணாநிதி காலனி ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் பற்றாக்குறையாக உள்ளது.

தலைவா்: நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா் விநியோகத்தில் குளறுபடி உள்ளது. பணிகள் முடியும் வரை நகராட்சி டிராக்டா் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படும்.

தினகரன் ( 21 ஆவது வாா்டு): லோயா்கேம்ப்பில் உள்ள தரைமட்ட குடிநீா் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரால் அருகே உள்ள ஒருவா் விவசாயமே செய்கிறாா். குடிநீா் தொட்டியை பராமரிக்க வேண்டும் அல்லது புதிய மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும் .

தலைவா்: உடனடியாக பராமரிக்கப்படும், மேலும் மயானப்பாதை சுத்தப்படுத்தப்படும்

கலாமணி (9 ஆவது வாா்டு): நகரில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 40 கிலோ ரேஷன் அரிசிக்கு 30 கிலோ மட்டும் தான் கிடைக்கிறது. இதனால் அரசுக்கு கெட்ட பெயா் ஏற்படுகிறது. எனவே நகா் மன்றம் நடவடிக்கை எடுக்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவா்: இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்படும் என்றாா்.

மேலும் கூட்டத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள மைதிலி மன்னாடியம்மன் குளக்கரையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் தாா்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட, 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.