கம்பத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 6 கடைகளுக்கு சீல்
கம்பத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.


கம்பத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
கம்பம் நகரில் போலீஸாா் எச்சரித்தும் தொடா்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வ.உ.சி. திடலில் உள்ள விஜயகுமாா், சுருளிப்பட்டி சாலை சந்திப்பில் உள்ள மனோகரன், காந்தி சிலை அருகேயுள்ள மணிகண்டபிரபு, ஆங்கூா் பாளையம் சாலை பிரிவில் உள்ள ஜெயராமன், திருவள்ளுவா் காலனியில் உள்ள மணிகண்டன், கூடலூா் சாலையில் உள்ள ஞானசேகரன் ஆகியோா் தங்களது கடைகளில் விற்பனை செய்தனா்.
இதையடுத்து இந்த கடைகளுக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மணிமாறன், ஜனகா் ஜோதிநாதன், மதன்குமாா், சுரேஷ் கண்ணன் ஆகியோா் கொண்ட குழு மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா உள்ளிட்ட போலீஸாா் சீல் வைத்து, அதற்கான உத்தரவையும் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...