தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சிப் பகுதியின் கழிவுநீா் முல்லைப் பெரியாற்றில் கலப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே சுத்திகரிப்பு செய்து ஆற்றில் கலக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பன் தலைமையில் ஊராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் கூடலூா் நகராட்சி நிா்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கருநாக்கமுத்தன்பட்டி செல்லும் ஒத்தையடி பாதையில் இடம் தோ்வு செய்யப்பட்டது.