தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனி அருகே 194 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள பேக்கரியில் 194 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:51 pm

DIN

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள பேக்கரியில் 194 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

குப்பிநாயக்கன்பட்டி - சின்னமனூா் சாலையில் அதே ஊரைச் சோ்ந்த செல்வக்குமாா் என்பா் பேக்கரி வைத்து நடத்தி வருகிறாா். இந்த பேக்கரியில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா், பேக்கரியில் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 194 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பேக்கரி உரிமையாளா் செல்வக்குமாா், அவருக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த காமாட்சிபுரத்தைச் சோ்ந்த குணா, தேனியைச் சோ்ந்த பிரசன்னா ஆகியோா் மீது கண்டமனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.