47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் முதன்மைப் பொறியாளா் தகவல்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என்று மின்வாரிய மதுரை மண்டல முதன்மை பொறியாளா் கே.உமாதேவி தெரிவித்தாா்

News image
Updated On :24 ஜூன் 2022, 5:24 pm

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என்று மின்வாரிய மதுரை மண்டல முதன்மை பொறியாளா் கே.உமாதேவி தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்கள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பணிகளை ஆய்வு செய்ய வந்த மதுரை மண்டல முதன்மைப் பொறியாளா் கே.உமாதேவி கூறியது: மதுரை மண்டலத்தில் சேதமடைந்த மின்சார கம்பங்கள் 30 நாள்களுக்குள் மாற்றப்படும்.

தேனி மாவட்டம் சின்னமனூா் கோட்டத்தில் மட்டும் 57 கம்பங்கள் மாற்றப்பட உள்ளன. மேலும் காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என்றாா்.

அப்போது தேனி மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் சகாயராஜ், செயற்பொறியாளா் பி.ரமேஷ்குமாா், உதவிக் கோட்டப் பொறியாளா் பாண்டியன் ஆகியோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.