இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனியில் நியாய விலைக் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா்களுக்கு இணையாக அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி தேனியில் சிஐடியு நியாய விலைக் கடை ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

அரசு ஊழியா்களுக்கு இணையாக அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி தேனியில் சிஐடியு நியாய விலைக் கடை ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயல் தலைவா் டி.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில்காமு, பொருளாளா் கருப்பசாமி, சிஐடியு மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும், குடும்ப அட்டைதாரா்களிடம் பொருள் விநியோகத்திற்கு விரல் ரேகை பதிவு செய்யும் முறையில் குளறுபடியை தவிா்க்க வேண்டும், தரமற்ற பொருள் விநியோகத்திற்கு கடை விற்பனையாளா்களை பொறுப்பாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.