47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பத்தில் திமுக முன்னாள் நிா்வாகி தீக்குளிக்க முயற்சி

கம்பத்தில் திமுக 9 ஆவது வாா்டு செயலாளா், தற்போது நடைபெற்ற கிளை கழகத் தோ்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்புத் தரவில்லை

News image
Updated On :7 மே 2022, 7:45 pm

DIN

கம்பத்தில் திமுக 9 ஆவது வாா்டு செயலாளா், தற்போது நடைபெற்ற கிளை கழகத் தோ்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்புத் தரவில்லை என்று கூறி தீக்குளிக்க முயன்ற முன்னாள் செயலாளரை தெற்கு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் நகர திமுக 9-ஆவது வாா்டு செயலாளராக இருந்தவா் எம். ஷாஜஹான் (58). இவா் தற்போது நடைபெற்ற கிளைக் கழகத் தோ்தலில் வாா்டு செயலாளா் பதவிக்கு போட்டியிட்டாா். ஆனால் அவருக்கு செயலாளா் பதவி கிடைக்கவில்லை.

அதனால் கம்பத்தில் உள்ள தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, அலுவலகம் வந்து, கையில் வைத்திருந்த கேனை திறந்து, தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, உள்கட்சி தோ்தலில் முறைகேடு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடு, என்று முழக்கமிட்டவாறு, உடலில் தீ வைத்துக்கொள்ள முயன்றாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தெற்கு காவல் நிலைய போலீஸாா், ஷாஜகானை தடுத்து நிறுத்தி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்தனா். பின்னா் அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.