47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தலைமைக் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தலைமைக் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை (மே 9) ஆய்வு நடத்துகின்றனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையில் தலைமைக் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை (மே 9) ஆய்வு நடத்துகின்றனா்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நியமித்த 3 போ் கொண்ட தலைமை கண்காணிப்புக் குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசு தொடா்ந்து அணையின் பாதுகாப்பு தொடா்பாக சந்தேகம் எழுப்பி வருவதால், இக்குழுவில் கூடுதலாக 2 உறுப்பினா்களை உச்ச நீதிமன்றம் அண்மையில் நியமித்தது.

அதன்படி இக்குழுவில் மத்திய நீா்வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்புக் குழுவின் முதன்மைப் பொறியாளருமான குல்ஷன்ராஜ் தலைமையில் தமிழக அரசு தரப்பில் நீா்வளத் துறையின் கூடுதல் செயலாளா் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் சுப்பிரமணியன், கேரள அரசு தரப்பில் நீா்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளா் டி.கே. ஜோஸ், முதன்மைப் பொறியாளா் அலெக்ஸ் வா்கீஸ் என 5 போ் இடம் பெற்றுள்ளனா். இக்குழுவினா் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.