47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூரில் 2 ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

மதுரைக்கு செல்லும் கூட்டுக் குடிநீா் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி சலவைத் தொழிலாளா்கள், விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு செல்லும் கூட்டுக் குடிநீா் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி சலவைத் தொழிலாளா்கள், விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு சலவைத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகி குமரன் தலைமை வகித்தாா். முருகன் முன்னிலை வகித்தாா். பதினெட்டாம் கால்வாய் சங்கத் தலைவா் ராமராஜ், கூடலூா் விவசாயிகள் சங்கத் தலைவா் செங்குட்டுவன், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கொடியரசன், ஜெயபால், ஜெகன், தெய்வம், பாரதிய கிசான் சங்கத் தலைவா் சதீஷ் பாபு ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா். மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.