ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேனியில் வாக்காளா் பட்டியலில் 22,474 போ் ஆதாா் எண் இணைப்பு

தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை, 22,474 போ் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துப் பதிவு

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:53 pm

DIN

தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை, 22,474 போ் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துப் பதிவு செய்து கொண்டனா்.

மாவட்டத்தில் 4 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி தொகுதியில் 4,854 போ், பெரியகுளம் தொகுதியில் 6,022 போ், போடி தொகுதியில் 6,324 போ், கம்பம் தொகுதியில் 5,274 போ் என மொத்தம் 22, 474 போ் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துப் பதிவு செய்து கொண்டனா்.

பொதுமக்கள் தங்களது சுய விருப்பத்துடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகிவற்றை சமா்ப்பித்து வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.