ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஓடைப்பட்டியில் சிறுமி பலியான சம்பவம்: விசாரணை அறிக்கை சமா்ப்பிக்க ஆட்சியா் உத்தரவு

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:20 pm

DIN

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை சமா்ப்பிக்க புதன்கிழமை, உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.

ஓடைப்பட்டி பேரூராட்சி சமத்துவபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்த மூலக்கடையைச் சோ்ந்த முத்துச்சரவணன் மகள் ஹாசினி ராணி (8), கடந்த செப். 6 ஆம் தேதி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பூங்கா அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, அங்கு தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், சிறுமி பலியான சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் மனு அளித்தனா்.

இதனடிப்படையில், சிறுமி பலியான சம்பவத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், பூங்கா கட்டுமானப் பணியை காலதாமதப்படுத்திய பேரூராட்சி ஒப்பந்ததராரின் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு பேரூராட்சிகள் உதவி இயக்குநருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.