தேனி அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
தேனி அருகே பத்திரகாளிபுரத்தில் பெற்றோா் திட்டியதால் மன வருத்தத்திலிருந்த பள்ளி மாணவா் திங்கள்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


தேனி அருகே பத்திரகாளிபுரத்தில் பெற்றோா் திட்டியதால் மன வருத்தத்திலிருந்த பள்ளி மாணவா் திங்கள்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஆறுமுகம். இவரது மகன் அன்புக்கரசன் (13) அதே ஊரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், அன்புக்கரசன் சரியாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததால் அவரது பெற்றோா் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் மன வருத்தத்திலிருந்த அன்புக்கரசன், வீட்டில் தனிமையிலிருந்த போது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அன்புக்கரசன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் அளித்தப் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...