கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் சுருளியாறு மின்சார நிலைய சாலையில் உள்ள பளியன்குடி அடிவாரத்தில் வேங்கை கானல் பகுதியில் மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
தேனி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூடலூர் நகர இந்து முன்னணி தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். வரும் ஏப்.16 ல் சித்ரா பௌர்ணமி அன்று முழுநிலவு விழா கொண்டாடுவதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிகள் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்று விழாவில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் கந்தவேல் செய்திருந்தார்.