முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு

பருமழை குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது, இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பருமழை குறைந்தது. இதனால் நீர்மட்டம் 136 அடியை தொடவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

நீர் வரத்து குறைவு

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஜூலை 15-ல் விநாடிக்கு, 8,143 கன அடி தண்ணீர் வந்தது. ஜூலை 16-ல் விநாடிக்கு 6,700 கன அடியாகவும், ஜூலை 17-ல் விநாடிக்கு 3,737 கன அடியாகவும், ஜூலை 18-ல் திங்கள்கிழமை விநாடிக்கு 2,543 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,879 கன அடியாகவும் இருந்தது. 

தொடர் மழையை எதிர்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் அணையில் நீர் வரத்தும், மழையும் குறைந்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.90 அடி மொத்த உயரம் (152 அடி), அணையில் நீர் இருப்பு, 6,093 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு 1,879 கன அடி நீர், தமிழக பகுதிக்கு வெளியேற்றம் விநாடிக்கு 1,867 கன அடியாக இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 5.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 1.0 மி.மீ., மழையும் பெய்தது.

மின்சார உற்பத்தி

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் கடந்த ஜூலை 4 முதல் நான்கு மின்னாக்கிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நான்கு மின்னாக்கிகளில் தலா  42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

இதையும் படிக்க:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com