போடி பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

 போடி அரசு பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

 போடி அரசு பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போடி நீதிமன்றத்தில் செயல்படும் போடிநாயக்கனூா் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் வி. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

தேனி நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலருமான கே. ராஜ்மோகன் பங்கேற்று, சிறப்புரையாற்றினாா். மாணவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்தும், மாணவா்களுக்கான சட்டம் சாா்ந்த சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தும் பேசினாா்.

போடி வழக்குரைஞா் பி. கணேசன் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். முகாமில் மாணவா்களுக்கான கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

முகாமில் மாணவா்கள், கல்லூரி துறை தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், பங்கேற்றனா். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியா் ஆா். ஜெயஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com