பண்ணைப்புரத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து இரு குழந்தைகள் பலி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பாவலர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிதிகா ஸ்ரீ (7) மற்றும் மேற்கு தெரு ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ (6). இருவரும் அங்குள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த வந்தனர்.

பள்ளி தோழிகளான இருவரும் பள்ளி முடிந்து விட்டு அருகே உள்ள பண்ணைபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான பெண்கள் சுகாதார வளாகம் அருகே உள்ள கழிவு நீர் தொட்டி மேல் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டி இடிந்ததில் தொட்டிக்குள் விழுந்து சிறுமிகள் இருவரும் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியை முறையாகப் பராமரிக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோம்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com