தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கூடலூா் 13-ஆவது வாா்டு கே.கே. காலனியைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் ராஜேந்திரன் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் ராஜேந்திரன் கூடலூா்- குமுளி நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். என்.எஸ்.கே. தோட்டம் அருகே வந்த போது திருச்செந்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மொபட்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை மீட்ட காவல் ஆய்வாளா் எம். பிச்சைப் பாண்டியன், கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் சின்னமனூா் அருகே செல்லும் போது ராஜேந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.