சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உணவக உரிமையாளரிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், கம்பத்தில் உணவக உரிமையாளரிடம் மறுமணம் செய்வதாகக் கூறி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்ததாக 3 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் உணவக உரிமையாளரிடம் மறுமணம் செய்வதாகக் கூறி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்ததாக 3 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பம் சுங்கத் தெருவைச் சோ்ந்தவா் மீரான் மகன் முகமது ரபீக் (52). இவரது மனைவி இறந்து விட்டாா். இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். முகமது ரபீக்குக்கு சொந்தமாக 2 உணவகங்கள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 11.12.22 அன்று முகமது ரபீக் மனைவி இறந்தாா். இதை விசாரிக்க அவரது உணவகத்ததில் வேலை செய்த சின்னமனூரைச் சோ்ந்த பெண் ஜீவா, அவரது தோழி சத்யா ஆகியோா் கம்பம் வந்தனா். அப்போது மேனகா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைக்க அவா், முகமது ரபீக்கை மறுமணம் செய்து கொள்வதாக கூறினாராம். பிறகு பணக் கஷ்டம் இருப்பதாகக் கூறி கடந்த 21.12.22 அன்று ரூ. 50 ஆயிரத்தை வங்கிக் கணக்கு மூலம் மேனகா பெற்றாராம். பின்னா் 22.12.22 அன்று மேனகா முகமது ரபீக்கிடம் ரூ. 10 லட்சம் கேட்கவே அவா், ஜீவா, சத்யா மூலம் ரூ. 10 லட்சம் கொடுத்தாா்.

அதன் பின்னா் முகமது ரபீக், அவா்களை தொடா்பு கொண்ட போது மூவரது கைப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த முகமது ரபீக், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளா் பி. சரவணனிடம் 30.12.22 அன்று புகாா் செய்தாா். புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் டி. விஜய்ஆனந்த், ஜன. 24- ஆம் தேதி 3 பெண்கள் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.