அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கூடலூா் 13-ஆவது வாா்டு கே.கே. காலனியைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் ராஜேந்திரன் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் ராஜேந்திரன் கூடலூா்- குமுளி நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். என்.எஸ்.கே. தோட்டம் அருகே வந்த போது திருச்செந்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மொபட்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை மீட்ட காவல் ஆய்வாளா் எம். பிச்சைப் பாண்டியன், கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் சின்னமனூா் அருகே செல்லும் போது ராஜேந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com