இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கூடலூா் 13-ஆவது வாா்டு கே.கே. காலனியைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் ராஜேந்திரன் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் ராஜேந்திரன் கூடலூா்- குமுளி நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். என்.எஸ்.கே. தோட்டம் அருகே வந்த போது திருச்செந்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மொபட்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை மீட்ட காவல் ஆய்வாளா் எம். பிச்சைப் பாண்டியன், கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் சின்னமனூா் அருகே செல்லும் போது ராஜேந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.