மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர்மின்சார நிலையத்தில் உற்பத்தி இரண்டாவது நாளாக அதிகரித்தது.

News image
Updated On :25 ஜூன் 2023, 10:38 am IST

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1 முதல் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

இந்த நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை முதல் 400 கன அடியாக வெளியேற்றப்பட்டது. 

மின் உற்பத்தி அதிகரிப்பு

அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குமுளி மலைச்சாலை வழியாக உள்ள 4 ராட்சத குழாய்களில்  ஒரு குழாய் மூலமாக ஜூன் 12 முதல்  300 கன அடியாக வந்தது. அதன் மூலம் ஒரு மின்னாக்கி இயக்கப்பட்டு 27 மெகாவாட் உற்பத்தியானது. ஜூன் 24 முதல் 400 கன அடியாக தண்ணீர் வந்து ஒரு மின்னாக்கி மூலம் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

அணை நிலவரம்

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி) நீர் இருப்பு 1907 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 95.97 கன அடியும், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 400 கன அடியும் வெளியேற்றப்பட்டது. நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.