

தேனி மாவட்டம், கம்பத்தில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் 85- ஆவது ஆண்டு விழாவையொட்டி கம்பம் - கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.ஆா். சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் கட்ட சுத்தி அறிவழகன் வரவேற்றாா். இதில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்டு, நடுமாடு, பெரியமாடு என 5 வகையான ஜோடி மாடுகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற மாடுகள், ஓட்டுநா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை அ.இ.பா.பி. கட்சியின் நகர நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.