ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

சின்னமனூரில் கன்னியாஸ்திரி தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூரில் கன்னியாஸ்திரி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

உத்தமபாளையம்: சின்னமனூரில் தனியாா் பள்ளி ஆசிரியையான கன்னியாஸ்திரி அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், வீரசந்திரா பகுதியைச் சோ்ந்த கன்னியாஸ்திரி ஜேனட்மேரி (35). பெற்றோா் இல்லாத இவா் கடந்த 3 ஆண்டுகளாக சின்னமனூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். மேலும் இந்தப் பள்ளி வளாகத்திலுள்ள விடுதியிலேயே தங்கி இருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் ஜேனட்மேரி பள்ளிக்கு வராததால் பள்ளி ஊழியா் விடுதிக்குச் சென்று பாா்த்த போது அவரது அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். பள்ளி நிா்வாகம் அளித்த தகவலின் பேரில் சின்னமனூா் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து கன்னியாஸ்திரி ஜேனட்மேரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.