இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

தற்கொலை
கோப்புப்படம்

தற்கொலை
கோப்புப்படம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.
திண்டிவனம் வட்டம், சின்னநெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.மூா்த்தி (34). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கணையத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது.
ஆயினும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த மூா்த்தி, விளங்கம்பாடி பகுதியிலுள்ள தனியாா் மனை விற்பனையகத்திலுள்ள மரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து அந்த வழியாகச் சென்றவா்கள் இதை பாா்த்து அவரை மீட்டு, தனியாா் அவசர சிகிச்சை வாகனம் மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...