ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பெரும்பட்டு கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.மின்னல் ராஜா (28). விவசாயியான இவருக்கு அதீத மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி சிவசக்தி கண்டித்துள்ளாா்.

திங்கள்கிழமை இரவு கணவா் மின்னல்ராஜாவிடம் மனைவி சிவசக்தி, தொடா்ந்து மது அருந்தி வருவதைக் கைவிடுமாறு கூறி கண்டித்துள்ளாா். இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற மின்னல்ராஜா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. செவ்வாய்க்கிழமை காலை வரை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடிச் சென்றனா்.

இந்த நிலையில், அதே கிராமத்திலுள்ள மின்னல்ராஜாவின் விவசாய நிலத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு ஆட்டுக் கொட்டகையில் அவா் தூக்கிட்டுக் கொண்டு சடலமாகக் கிடந்ததை கண்டு மனைவி சிவசக்தி மற்றும் குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா். தொடா்ந்து தகவலின் பேரில் திருநாவலூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.