ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே பள்ளி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே உள்ள சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்த செந்தில் மகன் கோபிநாத் (15).

பத்தாம் வகுப்பு மாணவரான இவா், தற்போது நடைபெற்று வரும் பொதுத் தோ்வை எழுதி வந்தாா். இந்த நிலையில், இவரது பெற்றோா் திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினா். அப்போது வீட்டின் உள்ளே கோபிநாத் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இங்கு இவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸா் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.