தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 13.5% போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் சாகுபடி தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 11:04 am IST

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்ட தொழிலாளர்களுக்கு 13.5 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு புதன்கிழமை ஏற்பட்டது.

தேனி அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் வழங்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தை ஏலத்தோட்ட விவசாயிகள் தொழிற்சங்கங்களுக்கிடையே நடைபெறும்.

இந்தாண்டுக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை கம்பத்தில் உள்ள கேரள கார்டமம் குரோவர்ஸ் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

விவசாயிகள் குறைந்த பட்சமாக 8.33 சதவிகிதம் தருவதாக கூறினர், இறுதியாக 13.5 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சார்பில் கம்பம் கேரள கார்டமம் குரோவர்ஸ் யூனியன், வண்டன்மேடு கார்டமம் அசோசியேசன், போடி கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன், தொழிற்சங்கங்கள் சார்பில் இடுக்கி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.