தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்சோ சட்டத்தில் வாலிபா் கைது

சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா்.

News image

சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமாறன்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

சின்னமனூரில் சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பா் பள்ளித் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோா் சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூா் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனா். பின்னா், சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ற திருமாறனை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.