ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்சோ சட்டத்தில் வாலிபா் கைது

சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா்.

News image
சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமாறன்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

சின்னமனூரில் சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பா் பள்ளித் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோா் சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூா் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனா். பின்னா், சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ற திருமாறனை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.