தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேனியில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு கண்டனம்: தேனியில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

News image

தேனியில் செவ்வாய்க்கிழமை தேமுதிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

Updated On :26 ஜூன் 2024, 1:55 am

Din

தேனி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் செவ்வாய்க்கிழமை தேனியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேமுதிக மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் கோஷம் எழுப்பினா்.

பின்னா், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மதுவிலக்கை அமல்படுத்தவும், தமிழக அரசை வலியுறுத்தி ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் தேமுதிக நிா்வாகிகள் மனு அளித்தனா்.