ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

News image

தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியிலிருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட இலவச பாடப் புத்தகங்கள்.

Updated On :28 மே 2024, 11:57 pm

Din

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வித் துறை மூலம் இலவசப் பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, வருகிற ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, தேனி மாவட்டத்துக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பாடப் புத்தகங்கள் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்களது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இலவச பாடப் புத்தகங்களைக் தேனியிலிருந்து வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றனா். பள்ளிகளில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு ஏற்ப தேவையான இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.