தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பள்ளியில் புதிய கட்டடத்துக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி

சாயல்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதியுதவி வழங்கிய கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்யம் சரவணன்.

News image
சாயல்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதியுதவி வழங்கிய கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்யம் சரவணன்.
Updated On :6 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு, கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சியின் நிறுவனா் வெள்ளிக்கிழமை நிதி உதவி வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த 75 ஆண்டுகளாக ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வரும், இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாததால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்பு பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்தியம் சரவணன் இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.11 லட்சம் நிதியுதவி அளித்து, கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தாா். இதில் கடலாடி வட்டார யாதவா் சங்கத் தலைவா் சேதுஆறுமுகம், செயலா் ஆறுமுகம், பொருளாளா் நாகதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.