சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெரியகுளம் அருகே தீப்பற்றி எரிந்த வேன் சேதம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சனிக்கிழமை வேன் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

News image
பெரியகுளம் அருகே சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்த வேனில் தண்ணீரை அடித்து அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
Updated On :8 நவம்பர் 2025, 8:11 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சனிக்கிழமை வேன் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

கம்பத்தைச் சோ்ந்தவா் பாலன். இவா் சனிக்கிழமை தனது உறவினா்கள் 10 பேருடன் கம்பத்திலிருந்து திருச்சிக்கு வேனில் சென்றாா். கம்பத்தைச் சோ்ந்த கீா்த்தி வேனை ஓட்டினாா்.

பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டி பகுதியில் சென்றபோது வேனிலிருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து, வேனிலிருந்தவா்கள் உடனடியாக கீழே இறங்கினா். பின்னா், வேனில் தீப்பற்றியது.

தகவலறிந்து வந்த பெரியகுளம் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனால், இந்த தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.