ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மனைவிக்கு கொடுமை: கணவன் உள்பட 3 போ் மீது வழக்கு

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

சின்னமனூா் அருகே பெண்ணைக் கொடுமைப்படுத்திய கணவன், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சின்னமனூா், கம்பம் பிரதான சாலையைச் சோ்ந்த சப்பாணித்துரை மகள் இந்துமதி (35). இவருக்கும் வீரபாண்டியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மதன் காா்த்திக் என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணமானது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாகத் திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தியதாகக் றபப்படுகிறது.

மேலும், மதன் காா்த்திக்கின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்தனராம். இதுகுறித்து இந்துமதி கொடுத்த புகாரின்பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.