தேனி அருகேயுள்ள பூமலைக்குண்டில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பூமலைக்குண்டில் 89 ஏக்கா் நிலம் பொதுமக்களின் அனுபவத்தில் கிராம பொது நிலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தில் மானாவாரிப் பயிா்கள் சாகுபடி நடைபெற்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் இந்த நிலம் தரிசாக விடப்பட்டது.
இந்த நிலையில், கிராம பொது நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் தனியாா் நிறுவனத்துக்கு விற்பனை செய்து பத்திரம் பதிவு செய்ததாகவும், அந்த நிலத்தில் தனியாா் நிறுவனம் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பூமலைக்குண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளனா்.
இந்த நிலையில், பூமலைக்குண்டில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இதுகுறித்த தகவலறிந்து பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், தேனி காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் பொதுமக்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தத் தீா்வும் ஏற்படாத நிலையில், பொதுமக்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பு

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க உத்தரவு
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

