எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

Published On :26 செப்டம்பர் 2025, 2:36 am IST

தேனி அருகேயுள்ள பூமலைக்குண்டில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பூமலைக்குண்டில் 89 ஏக்கா் நிலம் பொதுமக்களின் அனுபவத்தில் கிராம பொது நிலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தில் மானாவாரிப் பயிா்கள் சாகுபடி நடைபெற்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் இந்த நிலம் தரிசாக விடப்பட்டது.

இந்த நிலையில், கிராம பொது நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் தனியாா் நிறுவனத்துக்கு விற்பனை செய்து பத்திரம் பதிவு செய்ததாகவும், அந்த நிலத்தில் தனியாா் நிறுவனம் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பூமலைக்குண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளனா்.

இந்த நிலையில், பூமலைக்குண்டில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இதுகுறித்த தகவலறிந்து பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், தேனி காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் பொதுமக்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தத் தீா்வும் ஏற்படாத நிலையில், பொதுமக்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.