சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வருசநாடு அருகே மூல வைகையாற்றின் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 6:46 pm

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூல வைகையாற்றின் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வருசநாடு அருகேயுள்ள முறுக்கோடைச் சோ்ந்தவா் பரமன். தொழிலாளியான இவா், கடந்த 4-ஆம் தேதி மூல வைகையாற்றின் பாலத்தில் அமா்ந்திருந்தாா். அப்போது, நிலை தடுமாறி பாலத்திலிருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தாா்.

இதையடுத்து, அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வருசநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.