எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!

உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றவா்கள் பணியைத் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:15 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றவா்கள் பணியைத் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், பென்னிக்குயிக் நகா், தென்நகா், பி.டி.ஆா்., இந்திரா குடியிருப்பு என பல்வேறு இடங்களில் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளி எடுத்த சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் பணியைத் தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தோ்தலுக்கு முன்னதாகவே சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரா்கள் உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி போன்ற பேரூராட்சிகளில் திட்டப் பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனா்.

இதுகுறித்து ஒப்பந்ததாரா்களிடம் கேட்ட போது, ‘அமெரிக்கா-ஈரான் போா் காரணமாக சாலை அமைக்க முக்கியமான மூலப் பொருளான தாருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.